Wednesday, August 8, 2012

மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்!

வணக்கம் வலையுலக நண்பர்களே,
மதுரை மாவட்டம் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பதிவர்களாகிய (BLOGGERS) நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட, மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே மதுரை மாவட்டம், அருகிலுள்ள திண்டுக்கல், சிவகங்கை போன்ற அருகிலுள்ள மாவட்டம் மற்றும் மதுரையைச் சேர்ந்த இந்தியாவின் மற்றைய பகுதிகள் மற்றும் மதுரையைச் சேர்ந்த அயல் நாட்டு பதிவர்களும் நமது குழுமத்தில் இணையலாம். 
bloggersmadurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களைப் பற்றிய விபரங்கள், வலைப்பதிவு பெயர், லிங்க் அனுப்பவும். மேலும் இந்த தளத்தில் பாலோயராகவும் இணையலாம்.
மேலும் தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

நட்புடன்,
தருமி - தருமி
தமிழ்வாசி பிரகாஷ் - தமிழ்வாசி